கற்பூரவல்லி

கற்பூரவல்லி வேறுபெயர்கள் - ஓமவல்லி , ஒதப்பன்னா , பாசானபேதி , கண்டிரி போரேஜ் . தாவரப்பெயர் - COLEUS AROMATICOS. குடும்பம் - லாமியேசியே . வளரும் தன்மை - இதன் தாயகம் இந்தியா . இதைப்பற்றிய குறிப்பிகள் நமது சித்தர்கள் ஓலைச்சுவடிகளில்இருந்ததாக சரித்திரம் சான்றியம்புகிறது . இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும் . இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர் . இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண் , செம்மண் , களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது .6.5 - 7.5 வரையிலான கார \ அமிலத்தன்மை ஏற்றது . பயன்தரும் பாகங்கள் - தண்டு , இலைகள் ஆகியவை . 6) பயன்கள் - கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல் , சளி , ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து . வியர்வை பெருக்கியாகவும் , கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும் . இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும் . இலைச...